Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் எனக்குள் பட்டாம்பூச்சி | கவிதை | கயல்விழி

எனக்குள் பட்டாம்பூச்சி | கவிதை | கயல்விழி

1 minutes read

மனதில்
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கும்
பின்னணியில்
இளையராஜா இசை
கேட்பதற்கும்
காதல் வர வேண்டுமா
என்ன.?

இதோ இந்த மின்மினிகள்
கண்சிமிட்டும்
போது
அதோ அந்த நிலவை
மறைத்த
மேகம் விலகும் போது

ஆசையாய் வளர்த்த
ரோஜாச்செடி முதல் மலரை
பிரசவித்த போது

அந்த
மரத்தடி பிச்சைகாரி
தலையைதடவி நல்லா
இரும்மா
என்ற போது

நீங்கள் காதலில்
எதிர்ப்பார்த்த
அத்தனை

பட்டாம்பூச்சிகளும்
இளையராஜா இசையும்
என்னை சுற்றி தான்
இருந்தது…!

நன்றி : எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More