அந்திநேர மூடுபனி முற்றத்தில்
கார்மேகமும் புடைசூழ
வாசற்கதவை மெல்ல திறந்திட -மெல்லிய
பருவ காற்றும் அள்ளிவந்த பருவமங்கையவள்
பனி சிந்தும் மேகமும் அவள்
உதடோடு ஒட்டியது
கூதலையும் கட்டியணைத்தபடி
கார்கூந்தல் முகையால் புன்னகையுடன்
தடம்புரட்டிச் சென்றால்- எனை
நறுமுகயும் சூடிய தேன்காற்றை போல்
தேகம் தீண்டி சென்றாள்
பொன்மலை போர்த்திய மென் முலையால்
கூதற் காற்றின் சூடு தனித்திடவே
சொந்தமாக வாவென்றேன்.
பொன்வசந்தம் அள்ளிடவா-என்
பொன்மானே
சீறிடும் நாகம் போல் திரும்பிடவே
அழகு மங்கையின் காரிருள் கூந்தலும்- ஒரு
கன்னத்தை ஒழித்தது
நாகமவள் நடையோ-அவள்
கருவண்ணம் சூடிய காரிகையோ
சிரிப்பும் சிந்திடும் சில்லறைதானோ
கொட்டிடுமே தவிலும் கோகுலத்தில்-உன்
அருகில் நானிருந்தால்-பெண்ணே
சீதனமே வேண்டாம்-உன்
சிறைக்கூண்டில் சிறைகொள்
அன்பே
கேசுதன்