யாழ் இந்து மகளீர் கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவிகள் சங்கம் ஒழுங்கு செய்த பொன்மாலைப்பொழுது நேற்று சனிக்கிழமை 14ம் திகதி மாலை சிறப்புற நடைபெற்றது.
தெற்கு லண்டனில் உள்ள Tolworth Girls School இல் நடைபெற்ற இன் நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் பழைய மாணவிகள், நலன் விரும்பிகள் மற்றும் கலை ரசிகர்கள் என பெருமளவானோர் கலந்து சிறப்பித்தனர்.
பிரித்தானியாவில் வாழும் இளம் தலைமுறையைச் சேர்ந்தோரின் கலை நிகழ்சிகள் நடைபெற்றன. புலம் பெயர் தேசத்திலும் தமிழர் கலை கலாச்சாரத்தின் வளர்ச்சியில் எம் மூத்த தலைமுறை அதீத அக்கறை எடுப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி நடைபெற்ற பொன்மாலைப்பொழுது, இந் நிகழ்ச்சி தொகுப்பு வணக்கம் லண்டன் டிவி யில் எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும்.