இந்தோனேசியாவில் இன்று காலை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்கர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும்விடப்படவில்லை.
உள்ளூர் நேரப்படி காலை 10:24 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இது உணரப்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திமோர் மற்றும் நியூகினி தீவுகளில் இந்த நில அதிர்வு கடுமையாக உணரப்பட்டது. எனினும் சேசதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.