சிரியாவில் விமானப்படை நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவின் அலெப்போ நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள அல்-பாப் நகரில் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 24 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல் ராணுவ ஹெலிகாப்டர்கள் அல்-பாப் நகரில் உள்ள கிளர்ச்சியாளர்கள் மீது குண்டு வீச முயன்றன. ஆனால் குறி தவறி அங்குள்ள மார்க்கெட்டில் குண்டுகள் விழுந்தன. இதில் 26 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்ததாக பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ராமி அப்துர் ரகுமான் தெரிவித்தார்.