வடக்கு கிழக்கில் பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தக்கோரி பெண்கள் அமைப்பினால் இன்று யாழ்ப்பாணத்தில் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.நீதிமன்றத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் இரண்டு மருங்கிலும் பெருமளவில் ஒன்று கூடிய பெண்கள் எதிர்ப்பு பதாகைகளையும் தாங்கியவாறு நின்றனர்.
யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கட்டுபடுத்த கோரியே இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.