வன்னி நலன்புரிச் சங்கத்தின் மருதநிலா ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் வெம்ப்ளியில் நடைபெற்றது. இச்சங்கம் தாயகத்தில் போரினால் பதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவிகளை செய்துவருவதுடன் வருடம்தோறும் பிரித்தானியா வாழ் வன்னி மக்களின் ஒன்றுகூடல்களையும் செய்துவருகின்றது.
மேலும் பிரித்தானிய ஆட்சியின்போது வெளிவந்த வன்னி மாவட்டங்களின் விபரங்கள் அடங்கிய நூலான ஜே பி லூயிஸ் எழுதிய மனுவல் ஒப் வன்னி தற்போது “இலங்கையின் வன்னி மாவட்டங்கள் : ஒரு கையேடு” என தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வைக்கப்பட்டது. முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வெளியீடான இன் நூலை வன்னி தமிழாக்கக் குழு தமிழில் மொழி பெயர்த்துள்ளது.
மருதநிலா நிகழ்வில் ஒவ்வொரு வருடமும் வன்னி பிரதேசத்தில் வெளிவரும் நூல்களை அறிமுகம் செய்வதும் பாராட்டுவதும் இச்சங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதுண்டு. அந்த வகையில் முக்கிய வரலாற்று ஆவணமாக பாதுகாக்க வேண்டிய இந் நூலை இம்முறை வெளியிட்டுள்ளார்கள்.
படங்கள் | பி சிவஞானசுந்தரம் ஓமந்தை