0
உடன்குடியில் முட்டை போட்டு நன்றாக இருந்த கோழி திடீரென சேவலாக மாறியது.
உடன்குடி அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர் க.செல்வராஜ்(50).மோட்டார் மெக்கானிக்கான இவரது வீட்டில் ஏராளமான ஆடு கோழிகளை வளர்த்து வருகிறார்.
இதில் பல தடவை முட்டைகள் இட்ட ஒரு கோழி திடீரென சேவல் போலத் கூவத்தொடங்கியதாம்.தொடர்ந்து சில நாட்களில் சேவல் போல கொண்டை,மற்றும் உடலமைப்புகள் மாறத்தொடங்கியதாம்.
இதனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.