“God is Dead” குறும்படம் இன்று உலகில் அனைவரது கவனத்தையும் தனது பக்கம் கவர்ந்துள்ளது. பிரான்ஸில் நடைபெற்றுவரும் மொபைல் குறும்பட போட்டியில் நம்மவர் குறும்படமான “God is Dead” குறும்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே. அவதாரம் தயாரிப்பில் வெளியான இக்குறும்படத்தை சதா பிரணவன் இயக்கியுள்ளார்.
பார்வையாளர்கள் தமது வாக்குகளை எதிர்வரும் 6ம் திகதி வரை பதிவு செய்யமுடியும். 810 குறும்படங்கள் கலந்து கொண்டுள்ள இப்போட்டியில் 50 குறும்படங்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேவேளை வாக்களிக்கும் முறை மூலமும் சிறந்த திரைப்படம் தெரிவாக உள்ளது.
அவதாரம் தயாரிப்பில் உருவான இக் குறும்படமானது தமிழர் தாயகத்தில் போர் நிகழ்த்த மண்ணின் நீட்சியாகத் தொடரும் ஆறாத வடுபோன்று, ஈழத்தமிழர் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையை தொட்டிருகின்றது. ஒரு நிமிடத்தில் ஒரு மொபைல் மூலம் ஒரு உன்னதமான படைப்பினை இயக்குனர் சதாப்பிரனவன் உருவாக்கியுள்ளார். ஒரு நிமிட படமானாலும் பல மணித்தியாலங்களின் உழைப்புத் தெரிகின்றது.
தமிழர் தாயக மீட்சிக்கான போராட்டத்தில் இயக்குனர் சதாபிரணவன் ஒரு பங்களிப்பினை செய்துள்ளவேளையில் நாம் அதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டாமா? வெற்றி பெறச்செய்வதில் எமது கரங்களும் இணையட்டும்.
ஒரு நிமிடத்தினுள் மிகப்பெரிய அவலத்தினை காட்ட முற்பட்ட வேளையில் கையாண்ட குறியீட்டு வடிவங்களும் எம் நெஞ்சத்தில் வலிகளை பரவ விடுகின்றன. மனித மாமிசம் தின்ன காத்திருக்கும் இராணுவப் பேய்களின் நடுவே கமராவுடன் நாமும் பயணிக்கின்றபோது பயத்தில் நடுங்கும் சிறுமியுடன் நாமும் நடுங்குகின்றோம். கையாலாகாத தருணத்தில் அந்தத் தந்தை போன்று நாமும் இறைவனை வேண்டுகின்றோம். முடிவில் மரத்துப்போய் நிற்கின்ற தாயிடம் சீருடை களைந்த ஆடையுடன் வெறிபிடித்து வரும் அந்த மனித மிருகத்தை பார்த்ததும் மனது விறைத்துப் போகின்றது. முடிவில் காமரா துப்பாக்கியின் அடியில் இறந்து கிடக்கும் சிலுவையை நோக்கி நகர்ந்தபோது பின்னணியில் ஆடைகள் கிழிக்கப்படும் ஓசைகள் கேட்கும்போது மனசும் கிழிந்து விடுகின்றது. மீண்டுவர சில நிமிடங்கள் எடுக்கின்றன. மனசின் ஓரத்தில் நந்திக்கடலில் இசைப்பிரியா வை சனல் 4 தொலைக்காட்சியில் காட்டியது தோன்றி நிலைத்தது.
நிச்சயம் பாருங்கள், மறந்துவிடாது வாக்களியுங்கள்.
பார்ப்பதற்கும் வாக்களிப்பதற்கும்;
http://fr.mobilefilmfestival.com/video/god-is-dead740
மற்றும் ஒரு நபர் ஒரு நாளைக்கு 10 தடவைகள் வாக்களிக்க முடியும், 06/02/2014 வரை இவ்வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இக்குறும்படம் வெற்றிபெறுமானால் நிச்சயம் உலகப்பரப்பில் வேற்றுமொழி சமூகத்தில் பெரிதாகப் பேசப்படும். ஈழத்தமிழர் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் ஒவ்வொன்றும் உலகில் உள்ள அனைவரிடமும் எடுத்துச்செல்ல வேண்டும். அந்தப் பங்களிப்பினை இக் குறும்படம் செம்மையாகச் செய்துள்ளது எனலாம். ஈழத்து திரைப்படத்துறையில் குறும்படங்களின் வளர்ச்சி நம்பிக்கை கொள்ள வைக்கின்றது.
வந்தியத்தேவன் | வணக்கம்LONDON க்காக
வாக்களிக்கும் முறை