கடந்த மாதம் 29ம் திகதி மேற்கு இலண்டனில் பிரமாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், நோர்வே மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
லண்டனை தளமாக கொண்டு இயங்கும் மூன்று ஊடகங்களான வெற்றி வானொலி , Cloud Media மற்றும் வணக்கம் லண்டன் இணையம் இணைந்து இவ் விழாவினை நடாத்தியிருந்தன. Lebara நிறுவனம் பிரதான அனுசரணை வழங்கியதுடன் ABI Fast Food மற்றும் Abarna Beauty Care இணை அனுசரணை வழங்கியிருந்தது. Little Asia எம்போரியம் ஆதரவினை வழங்கியிருந்தது.
கலைஞர்களை செம்கம்பள வரவேற்பு கொடுத்து அரங்கத்துக்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. இறுதிச் சுற்றுக்குத்தெரிவான 5 குறும்படங்கள் திரையிடப்பட்டதுடன் நேரடியாக நடுவர்களால் விருதுகள் தெரிவு செய்யப்பட்டன. லண்டனில் இருந்து கலந்து கொண்ட இயக்குனர் பிரேம் கதிர் இயக்கிய “ஏதிலிகள்” சிறந்த குறும்படத்துக்கான Lebara World Tamil Short Film Festival 2014 விருதை பெற்றுக்கொண்டது. இரண்டாவதாக பிரான்ஸ்சைச் சேர்ந்த ஸ்ரீ தயாளன் இயக்கிய “கோணல் சித்திரமும்” மூன்றாவதாக நோர்வையைச் சேர்ந்த பிரசன்னா இயக்கிய “இருளின் நிழல்” பெற்றுக்கொண்டது.
பார்வையாளர்களின் அதிக வாக்குகளைப் பெற்று பார்வையாளர் விருதை “ஏதிலிகள்” பெற்றுக்கொண்டது.
பிரதம விருந்தினராகவும் முதன்மை நடுவராகவும் கலந்துகொண்ட இயக்குனர் லெனின் எம் சிவம் கருத்து தெரிவிக்கையில், நாம் ஆரம்ப காலங்களில் எதனை கனவு கண்டோமோ அது இப்போது நனவாகுவது இவ் விழாவில் கலந்து கொள்ளும் போது தெரிகின்றது. இறுதிச்சுற்றுக்கு தெரிவான 5 குறும்படங்களும் சிறப்பாகவே அமைந்தன, தெரிவு செய்வதில் கடினமாக இருந்தது. விழா பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் ஒழுங்கு செய்யப்பட்டமை மகிழ்ச்சியை தருவதுடன் எமது கலைஞர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கும் என தெரிவித்தார்.
இவ் விழாவின் சிறப்பு வெளியீடாக “TAMIL GENERATION” மலரின் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
Below / Official Result | WTSFF : London 2014;
Below / Official Nomination | WTSFF : London 2014;
Below / Event Photos | WTSFF : London 2014;
Below \ Event Crew | WTSFF : London 2014