இந்த நாட்டில் நிரந்தரமான ஒரு சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங்கம் பேச வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங்கம் பேசினால் மாத்திரமே ஜனாதிபதி கூறுகின்ற சாந்தி சமாதானமாக இருக்கலாம்,அல்லது வேறுயாரும் கூறுகின்ற சாந்தி சமாதானம் இந்த நாட்டிற்கு வரும் என்கின்ற செய்தியை கூறிவைக்க விரும்புகின்றேன்.