0
துருக்கியின் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 200 ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 787 பேர் இந்த சுரங்கத்தில் சிக்கியுள்ளதுடன் இவர்களை மீட்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருவதாக துருக்கி வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து முதல் கட்ட விசாரணையில் சுரங்கத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீப்பிடிக்க காரணம் என்று தெரியவந்துள்ளது.