0
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை இடம்பெறுவதை எவராலும் தடுக்க முடியாது. எனினும், சர்வதேச விசாரணையின் மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதுமில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
யுத்த வெற்றியினை கொண்டாடுவது தமிழ் மக்களின் உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் செயலேயாகும். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.