Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விரிவுரையாளர் குருபரன் விவகாரம்; சுரேன் ராகவனும் உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்!

விரிவுரையாளர் குருபரன் விவகாரம்; சுரேன் ராகவனும் உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்!

1 minutes read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டப்பீட விரிவுரையாளர் சட்டத்தரணி கு.குருபரன் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன், யாழ் பல்கலைக்கழக உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில்,

“யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டப்பீடத்தின் விரிவுரையாளர் சட்டத்தரணி, கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றில் முன்னிலையாவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அழுத்தத்தின் பேரில் கடந்த வருடத்தின் பிற்பகுதியில் பல்கலைக்கழக பேரவை தடை விதித்தமை காரணமாக, அவர் தன்னுடைய விரிவுரையாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவேண்டிய துரதிஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது.

கல்விமானாக நான் அவருக்கு என்னுடைய ஆதரவை தெரிவிப்பதோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளேன்.

உயர்கல்வி அமைச்சரை சந்தித்து எனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதுடன் கலாநிதி குருபரனுக்கு ஏற்பட்டுள்ள நிலை தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளேன்.

கல்விமானொருவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு எப் யு ரி எ போன்ற இயக்கம் மௌனமாக இருப்பதும் ஆரோக்கியமான விடயமல்ல என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேலும், கல்விமான்களின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More