Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நீரில் மூழ்கிய இரு சகோதரர்களும் சடலங்களாக மீட்பு!

நீரில் மூழ்கிய இரு சகோதரர்களும் சடலங்களாக மீட்பு!

1 minutes read

ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகொட பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயிருந்த இரு சிறார்களும் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

10 வயது அண்ணனும், 8 வயது தங்கையுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

போகொட – கொட்டியாமலுவ பிரதேசத்தில் நேற்று மாலை கடும் மழை பெய்துள்ளது.

தமது வீட்டில் இருந்து வடிகானுக்கு அப்பால் உள்ள வீடொன்றுக்கு தாய் சென்றிருந்ததால் அவரை அழைத்து வருவதற்காகச் சென்ற வேளையிலேயே சிறார்கள் இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வடிகானைக் கடப்பதற்கு முற்பட்ட வேளை, வடிகானில் நீர் அதிகளவில் வந்தமையால் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த இரண்டு சிறுவர்களும் போகொட வித்தியாலயத்தில் தரம் 5 மற்றும் தரம் 2 இல் கல்வி கற்கும் சகோதரர்கள் ஆவர்.

ஹாலிஎல பொலிஸாரும், பொதுமக்களும் இணைந்து சிறுவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இராணுவமும் வரவழைக்கப்பட்டது.

சிறுவர்களின் தந்தை கொழும்பில் தொழில் புரிந்து வருவதுடன் குறித்த சிறுவர்கள் இருவரும் தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இன்று காலை தங்கையின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், முற்பகல் வேளை அண்ணனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More