September 22, 2023 3:20 am

‘மொட்டு’டன் முட்டிமோதும் பீரிஸ்! – இன்றும் கடும் விமர்சனம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டம் சட்டவிரோதமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று மீண்டும் அறிவித்தார்.

அத்துடன், மொட்டுக் கட்சியின் புதிய தவிசாளர் நியமனம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடந்த சனிக்கிழமை நடத்திய பொதுச்சபைக் கூட்டம் சட்டவிரோதமானது என்பதைப் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லுபடியற்றவையாகும். நீதிமன்றம் ஊடாக இதனை நாம் நிரூபிப்போம்.

கிராமங்களில் மரணச் சங்கக் கூட்டத்தை நடத்துவதற்குக் கூட நடைமுறைகள் உள்ளன.” – என்றார்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்