ஜப்பானில் யமகட்டா நகரில் நடைபெற்ற ‘ஓல் ஜெப்பான் சீனியர் அண்ட் மாஸ்டர்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ்’ போட்டித் தொடரின் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கையின் மில்கா கிஹானி டி சில்வா பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த அணி தங்கப் பதக்கம் வென்றது.
மேலும் 5 வீராங்கனைகளின் பங்குபற்றுதலுடன் இப்போட்டியில் இலங்கையில் மில்கா பங்கேற்றிருந்தார்.
தமக்கு கிடைத்த புலமைப்பரிசில் ஒன்றின் அடிப்படையில் ஜப்பானில் தங்கியிருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் மில்கா, இம்முறை நடைபெற்ற டோகியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்தார்.
இலங்கை சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதலாவது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
மேலும், 2019 உலக ஜிம்னாஸ்டிக் வல்லவர் போட்டியிலும் மில்கா இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.