May 28, 2023 4:29 pm

3வருடங்களின் பின்னர் பிரீமியர் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட போட்டி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் மூன்று வருடங்களின் பின்னர் பிரீமியர் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியை அடுத்த மாதம் 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சுப்பர் லீக்கில் விளையாடாத 14 கால்பந்து கழகங்களை இணைத்துக் கொள்ள இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

அந்த 14 அணிகளும் லீக் முறையில் போட்டியிடுகின்றன, ஒரு அணி 13 எதிர் அணிகளுடன் போட்டியிட வேண்டும். அதிக வெற்றிகளைப் பெறும் அணிக்கு சம்பியன்ஸ் லீக் கால்பந்து சம்பியன்ஷிப்புடன் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்.

கடைசியாக 2019 உதைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ அணி சம்பியன்ஷிப்பை வென்றதுடன் அவர்களுக்கு ரூபா 10 இலட்சமும் இரண்டாம் இடத்தைப் பெற்ற கொழும்பு உதைபந்தாட்ட கழகத்திற்கு ரூபா 7.5 இலட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.

சோண்டர்ஸ், நிகம்பு யூத், அனுராதபுரம் சொலிட், மாத்தறை விளையாட்டுக் கழகம், பேருவளை சுப்பர் சன், குருநாகல் பெலிகன்ஸ், ஜாவாலேன் மற்றும் நாவலப்பிட்டி கிறிஸ்டல் பலஸ் ஆகிய எட்டு அணிகள் இவ்வருட சம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

மேலும், முதலாம் மற்றும் இரண்டாமிடங்களைப் பெற்ற இலங்கை பொலிஸ் மற்றும் செரண்டிப் விளையாட்டுக் கழகமும் அரையிறுதிச் சுற்றுக்கு மோதவுள்ள நிலையில், போட்டித் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு வந்த நியூஸ்டார் மற்றும் மொரகஸ்முல்ல ஆகியோருக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏ பிரிவில் 3ஆம் இடத்தைப் பெற்ற இலங்கை போக்குவரத்துச் சபை உதைபந்தாட்ட அணியும், குழு B இல் 3ஆம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகமும் இந்தப் போட்டியில் விளையாடவுள்ளன.

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் தொடர்பான அணி முகாமையாளர்கள் மற்றும் தலைவர்களின் கூட்டம் புதிய வடிவம் மற்றும் விதிகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் நடைபெறவுள்ளது.இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமரும் பங்குபற்றும் கழகங்களினால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண உள்ளார்.

உள்ளூர் வீரர்களைத் தவிர, பல வெளிநாட்டு வீரர்களும் இந்த விளையாட்டுக் கழகங்களில் பதிவு செய்து விளையாட அனுமதிக்கப்படுவதால், போட்டிகள் சூடு பிடிக்கும். சம்பியன்ஸ் லீக் என்பது இலங்கையின் கால்பந்தாட்டத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு போட்டியாகும், இது பாடசாலை வயதுடைய திறமையான இளம் வீரர்களுக்கு அதன் கதவுகளைத் திறக்கிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்