காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் லண்டனில் போராட்டம் நடத்தினர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு (வயது 52) இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையை குஜராத் நீதிமன்றம் விதித்தது.
இதைத் தொடர்ந்து அவரது பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி) பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது.
அதற்கு எதிராக இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர்.
அதன்படி, இங்கிலாந்து – லண்டனில் உள்ள காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தினர்.
Disqualified MP
இதேவேளை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதவி நிலை குறித்த பகுதியில் “தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி (Disqualified MP)” என மாற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
தொடர்புடைய செய்தி : ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனது