அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்து பலியாகியுள்ளார்.
அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171ல் பயணித்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர் எனக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்தி : விமான விபத்தில் உயிர்தப்பியவரை நலன் விசாரித்தார் பிரதமர் மோடி
அவரின் Boarding Pass சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அவரும் விபத்தில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக பணியாற்றிய ரூபானி, பயணிகள் பட்டியலில் 12ஆவது நபராக அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.