செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பொலிஸாரால் கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

பொலிஸாரால் கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

1 minutes read

இந்தியா – சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக பொலிஸாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி : இளைஞன் அஜித்குமார் மரணத்தில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

இதனிடையே, அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (22) விசாரணை நடைபெற்றது.

அப்போது, அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 25 இலட்சம் ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தி நீதிபதிகள் வழக்கில் நீதிமன்ற உத்தரவை அரசு முறையாக நிறைவேற்றி வருவதாகவும், அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.