இந்திய தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளோடு நடத்தும் கலந்தாய்வு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடைபெறுகிற நிலையில் இந்திய மேற்கு வங்க அரசு பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. பாஜக ஆளாத மாநிலங்களின் ஆளும் கட்சிகள்காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் என்.பி.ஆர் பணிகளைத் தொடங்கமாட்டோம் இதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநிலங்களும் தங்களின் பிரதிநிதிகளான தலைமைச் செயலாளர் மற்றும் இயக்குநர்களை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளன.ஆனால், இந்தக் கூட்டத்தில் தங்கள் மாநிலத்தின் சார்பில் பங்கேற்க முடியாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி சார்பில் உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.