0
உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் இலங்கையின் எரிபொருள் விலையேற்றத்தில் நேரடி தாக்கத்தை செலுத்தும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.