வரலாற்றில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று பதிவாகியுள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணின் விலை 141,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 130,500 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க ஆபரண தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விலை அதிகரிப்பே நாட்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட தங்கத்தின் அதிகபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது.