Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் பாலமாக விளங்கத் தயார் | சுமந்திரன்

அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் பாலமாக விளங்கத் தயார் | சுமந்திரன்

1 minutes read



அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்கு தயார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சிகூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வதை அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும்,அவர்கள் தங்கள் தாயகப்பகுதியில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் மில்லியன் கணக்கில் டொலரை முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என தெரிவித்த அவர் இலங்கையில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்யவும் அவர்கள் தயார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

டயனா கமகேயின் யோசனையை ஆதரித்த சுமந்திரன் இலங்கையின் சமமான மக்கள் என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கும் புலம்பெயா தமிழர்களிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதன் மூலம் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கத் தயார் என சுமந்திரன் தெரிவித் தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More