Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 5 வயது மகனை களனி கங்கையில் தள்ளி விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

5 வயது மகனை களனி கங்கையில் தள்ளி விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

1 minutes read

வத்தளையில் ஹெந்தல மற்றும் மட்டக்குளிக்கு இடையில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு ஆற்றில் குதிக்க முயன்ற தாய் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு (15) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பெண் தனது மகனை ஆற்றில் தள்ளி விட்டுள்ளார். பின்னர் தானும் குதிக்க முற்பட்டபோது, அந்தப் பகுதியால் சென்ற நபர் ஒருவர் அவரை தடுத்து பாதுகாத்துள்ளார்.

பின்னர் அந்தப் பெண் முதலில் ஹெந்தல பொலிஸ் நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அறிந்த மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த சிலர், ஹெந்தல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணைத் தாக்க முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

களனி கங்கையில் குறித்த தாயால் தள்ளிவிட்டு காணாமல்போன சிறுவனை கண்டு பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More