Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்கத் திட்டம்

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்கத் திட்டம்

1 minutes read

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையங்களை வெள்ளிக்கிழமைகளில் ஒதுக்குவதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பணியாளர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தினால் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் கூட தாமதமாக நடைபெறுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இணைந்து கவலை தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அவசர சுகாதார சேவைகளுக்கு ஒதுக்கப்படும் வகையில், மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை பரிந்துரைக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடரும் வகையில் மீதமுள்ள சுகாதார ஊழியர்களுக்கும் பொது போக்குவரத்து மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More