Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

1 minutes read

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரண்டு தெரிவுகளே உள்ளனவென்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். அதுகுறித்து மேலும் தெரிவித்தஅவர்,

ஜனாதிபதி கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்புவதாக இருந்தால் பாராளுமன்றத்தின் ஊடாக அல்லது மக்கள் போராட்டங்களின் ஊடாக மட்டுமே முடியும்.

இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக சகல அதிகாரங்களுடனும் இருந்த மார்க்கோஸ், அப்பதவியில் இருந்து மக்களின் கிளச்சியினால் வெளியேற்றப்பட்டார்.

 அவ்விதமாக தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தின் ஊடாக பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

அவ்வாறில்லையேல், பாராளுமன்றத்தின் ஊடாக அவருடைய அதிகாரங்களை முழுமையாக குறைப்பதன் ஊடாக ஆட்சி, அதிகார கட்டமைப்பிலிருந்து ஒதுக்கிக் கொள்ள முடியும்.

தற்போதைய நிலையில் மேற்படி இரண்டு முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தாக்கங்கள் தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மறுபக்கத்தில் உத்தேச 21ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அந்த திருத்தச்சட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

துரதிஷ்டமாக, உத்தேச 21ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக அரசியல் கட்சிகளிடையே இணக்கமான நிலைப்பாடொன்று எட்டுவதில் பெரும் இடைவெளிகள் காணப்படுகின்றன.

குறிப்பாக, எதிர்க்கட்சிகள் அத்திருத்தச்சட்டத்தினை முழுமையாக எதிர்க்கும் மனோநிலையில் உள்ளன. ஆகவே பாராளுமன்ற முறையிலும் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைக்க முடியுமான என்பதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More