Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் சிசு கொலை | வைத்தியர் கைது

மட்டக்களப்பில் சிசு கொலை | வைத்தியர் கைது

2 minutes read

மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் வேலைக்காரியாக கடமையாற்றி வந்த பெண் ஒருவருக்கு பிறந்த சிசு ஒன்றை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் மேல்மாடி வீதியில் வீடு ஒன்றில் வாடகைக்கு பெற்று தங்கியிருந்து கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் அம்பாறை மத்தியமுகாமைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவரை தனது வீட்டு வேலைக்கு அமர்த்திய நிலையில் 2017 மார்ச் 26 ஆம் திகதி குறித்த வீட்டுப்பணிப்பெண்ணுக்கு ஆண்பிள்ளை ஒன்று பிறந்துள்ளது.

குறித்த சிசு சீலையால் சுற்றி வீட்டின் கிணற்றில் வீசப்பட்டுள்ள நிலையில் வேலைக்காரிக்கு தொடர்ந்து இரத்த போக்கு காரணமாக மார்ச் 26 ஆம் திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மார்ச் 31 ஆம் திகதி தனது கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு வைத்தியர் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் கிணற்றை சோதனையிட்டபோது கிணற்றில் இருந்து சிசு ஒன்றை மீட்டதுடன் வீட்டுப்பணிப்பெண்ணை கைது செய்தனர்.

பின்னர் விசாரணையின் போது குறித்த குழந்தை தனக்கும் வைத்தியருக்கும் பிறந்ததாகவும், வைத்தியர்தான் வீட்டில் மகப்பேற்றை நடாத்தியதாகவும் ,சிசுவை தான் கிணற்றில் வீசியதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதேவேளை தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை எனவும், குழந்தைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனவும் வைத்தியர் தெரிவித்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய குழந்தையின் இரத்த மாதிரியும் வைத்தியரின் இரத்தமாதிரியையும் பெற்று அரச பகுப்பாய்வுக்கு மரபணு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த மரபணுபரிசோதனையில் குறித்த வைத்தியரின் இரத்த மாதிரியும் சிசுவின் இரத்த மாதிரியும் ஒன்று எனவும் வைத்தியருக்கு பிறந்த குழந்தை என பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட அறிக்கையை அரச பகுப்பாய்வு திணைக்களம் பொலிஸாருக்கும் நீதிமன்றிற்கும் அனுப்பியுள்ளது.

இதனையடுத்து மட்டு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் சந்திரகுமார தலைமையிலான பொலிஸார் தொடர் விசாரணையில் நேற்று திங்கட்கிழமை கண்டி வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் குறித்த வைத்தியரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து தனக்கு பிறந்த குழந்தை என மறைத்து குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ததுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த விீட்டுப்பணிப்பெண் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன், ஏற்கனவே அவருடைய சகோதரியின் கணவருக்கு பிறந்த குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் தொடர்ந்து வழக்கு இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More