0
கிளி பீப்பிள் அமைப்பு நடாத்திய இலவச மருத்துவ முகாம் கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை 7ம் திகதி நடைபெற்றது.
கிளிநொச்சி பிரதேச வைத்தியர்கள் இணைந்து மக்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதுடன் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.
இதில் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பரிசோதனைகளையும் ஆலோசனையும் பெற்றுக் கொண்டனர். அதன் பதிவுகள்.