ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, எதிர்வரும் 20 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பஸில் ராஜபக்ச அமெரிக்கா பறந்திருந்தார்.
இதையடுத்து ‘மொட்டு’க் கட்சியை வழிநடத்தும் பொறுப்பு நாமல் ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. அவர் பதில் தேசிய அமைப்பாளராகச் செயற்பட்டார்.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னரே பஸில் இலங்கை வருகின்றார்.