Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 6 விபத்துக்களில் அறுவர் பரிதாபச் சாவு!

6 விபத்துக்களில் அறுவர் பரிதாபச் சாவு!

1 minutes read

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 6 வீதி விபத்துக்களில் ஒரு சிறுவன் உட்பட அறுவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டி – நாரம்மல வீதியில் பொஹிங்கமுவ பிரதேசத்தில் வீதியோரம் நடந்து சென்ற சிறுவன் மீது கார் மோதியதில் சிறுவன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கிதலவ பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.

எல்ல – வெல்லவாய வீதியின் அம்வத்த பகுதியில் நாய் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா பஸ் நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது பஸ் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் குறித்த பாதசாரி உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பெரியமுகத்துவாரம் பாலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி – பெல்மடுல்ல வீதியின் பட்டுகெதர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கொங்கிறீட் தூணில் மோதியதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெல்லவாய – தனமல்வில வீதியில் தெளுல்ல கொலனி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த வானின் சாரதியே உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More