வவுனியாவில் சட்டவிரோத மின் வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது என்று மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குடாகச்சக்கொடி, மானேரிகுளம் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சென்ற குறித்த இளைஞர் அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.
குடாகச்சகொடிய, மேதாமாவத்தையை சேர்ந்த 25 வயதுடைய உமேஸ் லக்சன் என்கின்ற இளைஞரே பலியாகியுள்ளார்.
இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மடுக்கந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.