“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெயர்ப்பலகை மாத்திரமே மைத்திரி தரப்பிடம் உள்ளது. கட்சி ஆதரவாளர்கள் எம் பக்கமே உள்ளனர்” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறு போட்டியிடும் என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தாங்களே உண்மையான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.