யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 130 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.