அரசின் வரி விதிப்பு மற்றும் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பெருமளவான தொழில் வல்லுநர்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக அவர்கள் அணிதிரண்டு விண்ணதிரக் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
துறைமுகங்கள், பெற்றோலியம், மின்சாரம், வங்கிகள் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் ஊழியர்கள் ஏராளமானோர் அந்த இடத்தில் குவிந்துள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.