Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பு விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

1 minutes read

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பிரதான வீதியின் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார் என்று வாழைச்சேனைப் பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

பாடசாலை வீதி, விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கோ.முருகன் வயது (வயது 52) என்ற குடும்பஸ்தரே இந்த விபத்தில் உயிரிழந்தார்.

குறித்த நபர், உறவினர் ஒருவரின் மரண வீட்டில் கலந்துகொண்டவர்களுக்காக மதிய உணவைக் கொள்வனவு செய்யும் முகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை பின்னால் பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்றுடன் மோதினார்.

காயமடைந்தவர் அருகில் உள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி எம்.தயாபரன் விசாரணைகளை மேற்கொண்டார்.

பின்னர் சடலம் உடற்கூராய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

விபத்துக்குள்ளான சிறிய ரக பாரவூர்தி, மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More