Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “மண்சரிவுப் பாதிப்புக்குத் தோட்ட நிர்வாகமே பொறுப்பு!”

“மண்சரிவுப் பாதிப்புக்குத் தோட்ட நிர்வாகமே பொறுப்பு!”

0 minutes read

“பண்டாரவளை, பூனாகலை – கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“மீரியபெத்தையில் மண்சரிவு ஏற்பட்ட பின்னர், பதுளைப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கபரகல தோட்டமும் மண்சரிவு அபாய வலயத்தில் இருந்தது. எனவே, அம்மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாகத் தங்கவைக்குமாறும், வீடுகளை அமைப்பதற்குப் பாதுகாப்பான இடத்தில் காணி ஒதுக்கித் தருமாறும் நாம் தோட்ட நிர்வாகத்திடம் கோரியிருந்தோம்.

எனினும், தோட்ட நிர்வாகம் காணி வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் தொடர்பிலும் அசமந்தமாகச் செயற்பட்டுள்ளது.

எனவே, அரச நிர்வாகப் பொறிமுறை உரிய முன்னேற்பாடுகளைக் கோரியும், அதனை வழங்க நடவடிக்கை எடுக்காத தோட்ட நிர்வாகம் தற்போதைய மண்சரிவு அனர்த்தத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More