புத்தளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 17 மாணவர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில், முன்னதாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர்கள் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் மாணவர்களது ஒழுக்கம் தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், அவரது இல்லத்துக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற மாணவர்கள், குறித்த ஆசிரியர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பின்னர், காயமடைந்த ஆசிரியர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சம்பவம் தொடர்பில், இதுவரையில் 22 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.