Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடந்து சாதனை படைத்த இரட்டையர்கள்!

யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடந்து சாதனை படைத்த இரட்டையர்கள்!

0 minutes read

மலையகத்தைச் சேர்ந்த இரட்டையர்கள், யாழ்ப்பாணம் – கோட்டையில் இருந்து, கொழும்பு – காலிமுகத்திடல் நோக்கிய நடைபயணத்தை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளனர்.

சுமார் 400 கிலோமீற்றர் தூரத்தை, 32 மணித்தியாலங்களில் நடைபயணமாகக் கடந்து அவர்கள் நிறைவு செய்துள்ளனர்.

பொகவந்தலாவை – கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடைய தயாபரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இரட்டையர்களே இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – கோட்டையில் இருந்து தமது நடைபயணத்தை ஆரம்பித்த அவர்கள், 32 மணித்தியாலங்களில் கொழும்பு – காலிமுகத்திடலை அடைந்து சாதனை படைத்துள்ளனர்.

பன்னாட்டுச் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் இந்தச் சாதனையை அங்கீகரித்துச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More