December 7, 2023 3:47 pm

யாழில் வீட்டுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அட்டூழியம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணத்தில் வன்முறைக் கும்பல் ஒன்று வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அந்தக் கும்பல் தீக்கிரையாக்கியுள்ளது.

கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்புக் கமரா பதிவுகளின் அடிப்படையில் தாக்குதலாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து தாக்குதலுக்குப் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்