செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது!

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது!

0 minutes read
வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட மது ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட மது ஒழிப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்  தகவலையடுத்து மாவட்ட மது ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கஜேந்திரன் தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 – 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர். அவர்கள் சுந்தரபுரம், குழுமாட்டு சந்தி, கல்மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

மேலதிக விசாரணைகளின் பின் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.