வவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியில் இன்று காலை 22 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீடகப்பட்டுள்ளது என்று ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்
மேற்படி இளைஞரைக் காணவில்லை என வீட்டார் தேடியபோது அவர் வீட்டின் முன்பாகவுள்ள மரத்தில் தூக்கில் தொங்கியவாறு சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் மற்றும் கிராம சேவையாளருக்கு அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், இளைஞரின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.