செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கறங்குபோல் சுழன்று | துவாரகன்

கறங்குபோல் சுழன்று | துவாரகன்

0 minutes read

இந்தக் காலத்திற்கு
என்னதான் அவசரமோ?
சுழலும் வேகத்தில்
இழுத்து நடுவீதியில்
வீசிவிட்டுப் போகிறது.

என் வீட்டு நாய்க்குட்டிகள்
கண்மடல் திறந்ததும்
மல்லிகை மணம்வீசி
மனத்தை நிறைத்ததும்
சிட்டுக் குருவி வந்து
முற்றத்தில் மேய்ந்ததும்
நேற்றுத்தான் போலிருக்கிறது.

வெளிகளில் இறக்கைகட்டிப்
பறக்கலாம் என்றீர்கள்.
இப்போ
பிணங்களை வெளியே
கொண்டு வாருங்கள்
என்றல்லவா அழைக்கிறார்கள்.

துவாரகன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.