செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் லிஸ்பன் விபத்தில் இங்கிலாந்து தம்பதி உட்பட 16 பேர் பலி

லிஸ்பன் விபத்தில் இங்கிலாந்து தம்பதி உட்பட 16 பேர் பலி

1 minutes read

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் உள்ள பிரபலமான க்ளோரியா ஃபியூனிகுலர் டிராம் விபத்துக்குள்ளானதில், இங்கிலாந்து தம்பதி உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இங்கிலாந்து குடிமக்களில், 36 வயதான கேய்லீ ஸ்மித் மற்றும் 44 வயதான நாடகப் பள்ளி விரிவுரையாளர் வில்லியம் நெல்சன் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்றாவது இங்கிலாந்து நபர் 80 வயது மதிக்கத்தக்கவர் என்றும் நம்பப்படுகிறது.

புதன்கிழமை உள்ளூர் நேரம் மாலை 6:05 மணியளவில், அவெனிடா டா லிபர்டேட் (Avenida da Liberdade) அருகே க்ளோரியா ஃபியூனிகுலர் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஒரு கேபிள் கழன்று விழுந்ததே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் தென் கொரியா, சுவிட்சர்லாந்து, உக்ரைன், பிரான்ஸ், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐந்து போர்ச்சுகீசிய நாட்டினர் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் ஐந்து பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

லிஸ்பன் மேயர் கார்லோஸ் மொய்டாஸ், இந்த “துயரமான விபத்தை” அடுத்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை அதிகாரிகள் சிதைவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். வாகனத்தின் கேபிள் இயங்குமுறை, பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் சேவைப் பதிவுகள் குறித்து விசாரணை கவனம் செலுத்தும் என போக்குவரத்து விபத்து விசாரணை அலுவலகம் தெரிவித்துள்ளது. 140 ஆண்டுகள் பழமையான இந்த ஃபியூனிகுலரின் பராமரிப்புப் பதிவுகள் விசாரணையின் ஒரு பகுதியாக கைப்பற்றப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.