Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா யாரும் பெண்களை தவறாக பேசக்கூடாது | சித்தார்த் ட்வீட் குறித்து சாய்னா நேவால் கருத்து

யாரும் பெண்களை தவறாக பேசக்கூடாது | சித்தார்த் ட்வீட் குறித்து சாய்னா நேவால் கருத்து

1 minutes read

சித்தார்த் என்னை பற்றி கூறியது குறித்து கவலை இல்லை என சாய்னா நேவால் தெரிவித்தார்.

அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி வரும் வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இந்த சம்பவத்திற்கு பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் கண்டனம் தெரிவித்தார்.

சாய்னா நேவாலின் இந்த கருத்திற்கு பதில் அளித்து நடிகர் சித்தார்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பெண்களை கொச்சை படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. சித்தார்த்தின் மீது தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்தது.

இதையடுத்து தனது ட்விட்டர் பதிவுக்கு நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டார். தற்போது இந்த விவகாரம் குறித்து சாய்னா நேவாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

சித்தார்த் என்னை பற்றி ஏதோ ஒன்றை கூறி பின் மன்னிப்பு கேட்டுவிட்டார். இந்த விவகாரம் ட்விட்டரில் ஏன் வைரலானது என்பதே தெரியவில்லை. ட்விட்டரை பார்த்தபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. யாரும் பெண்களை தவறாக பேசக்கூடாது. சித்தார்த் என்னை பற்றி கூறியது குறித்து கவலை இல்லை. நான் என் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்.

இவ்வாறு சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More