எண்ணெய் வடியும் பிரச்சினையானது முகத்தின் அழகினைக் கெடுத்துவிடும், எவ்வளவோதான் நாம் மேக்கப் போட்டாலும், அவை அத்தனையும் வீணாகிப் போய்விடும். இப்போது நாம் எண்ணெய் வடியும் முகத்தினை முல்தானி மெட்டியினைக் கொண்டு எவ்வாறு தீர்வு காண்பது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
1. முல்தானி மெட்டி- 4 டீஸ்பூன்
2. ரோஸ் வாட்டர்- கால் டம்ளர்
3. பாதாம் பருப்பு- 3
4. முந்திரி- 3
செய்முறை:
1. பாதாம் பருப்பு மற்றும் முந்திரியை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
2. இதனுடன் சிறிது தண்ணீர் விட்டு மிக்சியில் அடித்துக் கொள்ளவும்.
3. இந்த பாதாம்- முந்திரி பேஸ்ட்டை முல்தானி மெட்டியுடன் கலக்கவும்.
4. இந்தக் கலவையினை ரோஸ் வாட்டரில் நன்கு கலந்து, பிரிட்ஜில் வைக்கவும்.
இதனை எடுத்து முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து கழுவவும். உங்கள் முகம் பளபளவென மின்னும்.
நன்றி : தமிழ்-ருவின்