செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்ய வழிகள்

கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்ய வழிகள்

1 minutes read

பொதுவாக வீட்டில் இருக்கும் கண்ணாடிப் பொருட்களை அவ்வளவு எளிதாக சுத்தம் செய்து விட முடியாது. கண்ணாடிப் பொருட்களை சுத்தம் செய்யும் போது அவற்றில் கைத் தடங்கள் பதிய வாய்ப்பு உள்ளது.

கண்ணாடி பொருள்கள்

சில சமயங்களில் நீரைக் கொண்டு துடைக்கும்போது திட்டுதிட்டாக தெரியும். எனவே கண்ணாடிகள், குவளைகள், கண்ணாடி டப்பர்வேர், தண்ணீர் பாட்டில்கள் இவற்றை சுத்தம் செய்து புதியதாக மாற்ற இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. பொதுவாக கண்ணாடி டம்ளர், வாட்டர் பாட்டில்கள் என்றால் அதன் மூலை முடுக்குகள் முழுவதும் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். எனவே கண்ணாடி பொருட்களை எப்படி சுத்தம் செய்யலாம் என அறிவோம்.

கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்ய வழிகள் :

கண்ணாடி பாத்திரங்களை சுத்தம் செய்யும் போது அதில் சோப்பு ஒரு சில துளி வினிகர் மற்றும் ஒரு கப் சமைக்காத அரிசி இவற்றுடன் தண்ணீரை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையானது கண்ணாடி பொருட்களை ஆழமாக சுத்தம் செய்ய உதவுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

சமைக்காத அரிசி , பாத்திரம் கழுவும் சோப்பு மற்றும் வினிகர் இவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து வையுங்கள். பிறகு அதில் மேல் பாகம் வரைக்கும் தண்ணீர் நிரப்பி கொள்ளுங்கள். இப்பொழுது கிளாஸை ஒரு கையால் மூடிக் கொண்டு அல்லது மூடியைக் கொண்டு மூடிக்கொண்டு நன்றாக குலுக்க வேண்டும். அரிசியுடன் தண்ணீரை கலந்து பயன்படுத்துவது கண்ணாடிப் பொருட்களை ஆழமாக சுத்தம் செய்யப் பயன்படுகிறது. பிறகு கண்ணாடி டம்ளரை உலர வைத்து நன்றாக துடைத்து எடுங்கள்.

அரிசி அளவில் சிறியது என்பதால் எல்லா மூலை முடுக்குகளிலும் சென்று சுத்தம் செய்ய உதவுகிறது. கண்ணாடி போன்ற கவனமாக கையாளும் பொருட்களை சுத்தம் செய்ய இது ஏற்ற வழியாகும். நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

நன்றி சமயம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.