ஈழத்தை பூர்வீகமாக கொண்ட கவிஞர் சேரனின் கவிதைகள் ஸ்பானிய மொழியில் நூலாக வெளிவந்துள்ளது. குறித்த நூலின் வெளியீடு அண்மையில் ஸ்பானி நாட்டின் பர்சிலோனா நகரத்தில் இடம்பெற்றது.
இதன்போது கவிஞர் கலந்து கொண்டு கவிதை வாசிப்பிலும் ஈடுபட்டார். கவிஞர் சேரனின் கவிதைகள் சிங்களம், மலையாலம், தெலுங்கு, பிரெஞ்சு என பல்வேறுபட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தற்போது இவரது கவிதைகள், சொற்களை மட்டும் விதை என்ற தலைப்பில், ஸ்பாயின் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.