Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மார்பக புற்றுநோயிலிருந்து மீள முடியுமா?

மார்பக புற்றுநோயிலிருந்து மீள முடியுமா?

2 minutes read

மார்பக கட்டிகள் அனைத்தும் புற்றுநோயாக இருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் மார்பகத்தில் கட்டி தென்பட்டால் உடனடியாக புற்று்நோய் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.

மார்பகப் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பெண்கள் மனம் தளரக்கூடாது. மற்ற பல நோய்களைப் போல மார்பக புற்று நோயைக் குணப்படுத்த முடியும். ஆனால் அதற்கு தொடர் சிகிச்சை மிகவும் அவசியம். எந்த ஒரு வியாதியையும் குணப்படுத்த சிகிச்சை மட்டும் போதாது. அதிலும் மார்பக புற்று நோயில் இருந்து மீள அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை அவசியம்.

இந்த நோயிலிருந்து நான் மீண்டு வருவேன் என்று சம்பந்தப்பட்ட பெண் உறுதியாக நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை மட்டுமே அந்தப் பெண்ணை நோயிலிருந்து முழுமையாக காப்பாற்றும் சக்தி பெற்றது.

மார்பக புற்று நோயால் பாதிப்படைந்த பெண்களை சமூகம் ஒதுக்கி வைத்தல் கூடாது. சமூகத்தின் தவறான நடவடிக்கைகளாலும், பேச்சுக்களாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மன உளைச்சலும், விரக்தியும் அடைய வாய்ப்புள்ளது. அதனால் சமூகம் பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் நடந்து கொள்வது இன்றியமையாதது.

மார்பக புற்று நோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்

  1. வைட்டமின் டி & ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
  2. நார்ச்சத்து நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், பீன்ஸ் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.
  3. பழங்களில் பெர்ரிஸ் மற்றும் பீச் உகந்தது.
  4. பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் சாப்பிட ஏற்றது. இது மார்பக புற்று நோயைக் குணப்படுத்த உதவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  5. வைட்டமின் டி சத்து நிறைந்த முட்டை, மீன் போன்றவற்றை சாப்பிடலாம். மாலை வெயிலில் சிறிது நேரம் நடப்பதன் மூலம் இயற்கையாகவே வைட்டமின் டி-யைப் பெற இயலும்.
  6. கிரின் டி புற்று நோய்க்கு எதிராக செயல்பட உதவுகிறது என்று பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து மார்பக புற்று நோயிலிருந்து மீண்டு வர உதவுகிறது.
  7. மஞ்சள் ஒரு மகத்துவமான குணம் கொண்ட மருந்து பொருள். நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை இயற்கையிலேயே மஞ்சளில் உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது, மார்பக புற்று செல்கள் வராமல் கட்டுப்படுத்தப்படுகின்றது.
  8. சீரான உடல் எடையோடு இருப்பது நல்லது. தினம் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். போதிய உடல் உழைப்பு உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முறையான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நம் உடலை எந்த விதமான நோயிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பெண்ணும் தன் உடலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி -மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More